தமிழ்
Sorah Al-Qiyamah ( The Resurrection ) - Verses Number 40
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ 
( 1 )  
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ 
( 2 )  
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ 
( 3 )  
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ 
( 4 )  
அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ 
( 5 )  
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ 
( 6 )  
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
فَإِذَا بَرِقَ الْبَصَرُ 
( 7 )  
ஆகவே, பார்வையும் மழுங்கி-
وَخَسَفَ الْقَمَرُ 
( 8 )  
சந்திரன் ஒளியும் மங்கி-
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ 
( 9 )  
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ 
( 10 )  
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
كَلَّا لَا وَزَرَ 
( 11 )  
"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ 
( 12 )  
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ 
( 13 )  
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ 
( 14 )  
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ 
( 15 )  
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ 
( 16 )  
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ 
( 17 )  
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ 
( 18 )  
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ 
( 19 )  
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ 
( 20 )  
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
وَتَذَرُونَ الْآخِرَةَ 
( 21 )  
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ 
( 22 )  
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ 
( 23 )  
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ 
( 24 )  
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ 
( 25 )  
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ 
( 26 )  
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ 
( 27 )  
"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ 
( 28 )  
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ 
( 29 )  
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ 
( 30 )  
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ 
( 31 )  
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ 
( 32 )  
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ 
( 33 )  
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ 
( 34 )  
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ 
( 35 )  
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى 
( 36 )  
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ 
( 37 )  
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ 
( 38 )  
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ 
( 39 )  
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ 
( 40 )  
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?